sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

3 ஆண்டுகளாக அலுவலர்கள் இன்றி செயல்படும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை

/

3 ஆண்டுகளாக அலுவலர்கள் இன்றி செயல்படும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை

3 ஆண்டுகளாக அலுவலர்கள் இன்றி செயல்படும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை

3 ஆண்டுகளாக அலுவலர்கள் இன்றி செயல்படும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை


UPDATED : நவ 16, 2014 12:00 AM

ADDED : நவ 16, 2014 11:56 AM

Google News

UPDATED : நவ 16, 2014 12:00 AM ADDED : நவ 16, 2014 11:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மூன்றாண்டுகளாக, நிரந்தர பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இன்றி, பொறுப்பு அதிகாரிகளை கொண்டே, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை செயல்பட்டு வருவதாக, புகார் எழுந்துள்ளது.

விதிகளை மீறி...

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துவக்கப்பட்டு, 10 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பேராசிரியர்களே, கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். இதில், பல்கலை பொறுப்பு பதிவாளராக இருந்த பேராசிரியர் முருகனுக்கு, விதிகளை மீறி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது குறித்து, கவர்னர் வரை பிரச்னை சென்றது.

இதுகுறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக இருப்பவர், அக்குழுவின் செயலரான பதிவாளர் பதவியில் இருக்கக்கூடாது என, பல்கலை விதி இருப்பதால், பேராசிரியர் முருகன், சில தினங்களுக்கு முன், பதிவாளர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அப்பதவிக்கு, கணிதத்துறை மூத்த பேராசிரியர், முருகன், பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கும், பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: பல்கலையில், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவிகளுக்கு நிரந்தர நியமனத்திற்கு, கடந்த ஆண்டு டிசம்பரில், விளம்பரம் வெளியிடப்பட்டது. அதற்கு, பலர் விண்ணப்பித்தும் இதுவரை நியமனம் நடக்கவில்லை.

6 மாதங்களுக்குள்...

விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளில் இருந்து, 6 மாதங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு நியமனம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், விண்ணப்பங்கள் இயல்பாகவே ரத்தாகி விடும். ஆனால், இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு 11 மாதங்கள் முடிந்து விட்டது. அதற்கு விண்ணப்பங்களையும் பரிசீலிக்க முடியாது. எனவே, இந்த விவகாரத்தில், அரசு தலையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us