sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டி.என்.பி.எஸ்.சி. மூலம் கல்வித்துறை பணியில் சேர்ந்தவர்கள் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல்

/

டி.என்.பி.எஸ்.சி. மூலம் கல்வித்துறை பணியில் சேர்ந்தவர்கள் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல்

டி.என்.பி.எஸ்.சி. மூலம் கல்வித்துறை பணியில் சேர்ந்தவர்கள் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல்

டி.என்.பி.எஸ்.சி. மூலம் கல்வித்துறை பணியில் சேர்ந்தவர்கள் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல்


UPDATED : நவ 16, 2014 12:00 AM

ADDED : நவ 16, 2014 11:57 AM

Google News

UPDATED : நவ 16, 2014 12:00 AM ADDED : நவ 16, 2014 11:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்வாகி, கல்வித்துறையில் பணியில் சேர்ந்தவர்கள், பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி.,யில் தேர்வான 1,500க்கும் மேற்பட்டோர் 2013 மே மாதம் கல்வித்துறையின் கீழ் பல்வேறு ஊர்களில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தனர். இவர்கள் இரண்டு ஆண்டு தகுதி காண் பருவம் முடிவதற்குள் பதவி உயர்வுக்கான 45 நாள் சிறப்பு பயிற்சி, பவானி சாகர் அரசு பயிற்சி மையத்தில் முடிக்க வேண்டும்.

இந்த பயிற்சி முடித்திருந்தால் மட்டுமே பதவி உயர்வு பெறலாம் என்பது நடைமுறையில் உள்ளது. இப்பயிற்சிக்கு அனுப்ப கல்வித்துறை கால தாமதம் செய்து வருவதாகவும், இதன் காரணமாக பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் உள்ளதாகவும் கல்வித்துறை ஊழியர்கள் புலம்புகின்றனர்.

பாதிக்கப்பட்டோர் கூறியதாவது: தகுதிகாண் பருவத்திற்கு பதவி உயர்விற்கான பயிற்சி முடிக்க வேண்டும். இதற்கு கால வரைமுறை எதுவுமில்லை. எங்களுக்கு பின்பு பிற அரசு துறைகளில் பணியில் சேர்ந்தவர்கள் சிறப்பு பயிற்சி முடித்து, பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கல்வித்துறையில் மட்டுமே இந்த நிலை உள்ளது. சில அரசு பள்ளிகளில் பணி வரன்முறை தகுதிக்கு அனுப்ப தலைமை ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மையம் பவானி சாகரில் மட்டுமே இருப்பதால் வாய்ப்பு வரும்போதுதான் அனுப்ப முடியும். இதற்காக நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என்றார்.






      Dinamalar
      Follow us