புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் அளித்த செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை ஆய்வுசெய்ய உத்தரவு
புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் அளித்த செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை ஆய்வுசெய்ய உத்தரவு
UPDATED : பிப் 20, 2015 12:00 AM
ADDED : பிப் 20, 2015 12:06 PM
அ நிறம் | அளவு
முசிறி: மாணவியரிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில், முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பழனிவேல் மற்றும் செந்தில் ஆகியோர், பள்ளிக் கல்வித்துறைச் செயலர் உத்தரவின்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கு மதிப்பெண் அளித்துள்ளதை, மறுஆய்வு செய்யவும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது, தனிப்பட்ட புகார்கள் வரும் நிலையில், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
