குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி
UPDATED : பிப் 21, 2015 12:00 AM
ADDED : பிப் 21, 2015 12:55 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மதுரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகளை பிப்., 22 முதல் நடத்துகிறது.
அரசின் பல துறைகளில் 964 காலி பணியிடங்கள் உள்ளன. அதை நிரப்ப குரூப் 2 தேர்வு நடக்கிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. இதில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இங்கு தங்களை தயார்படுத்தி கொள்ளலாம்.
அவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடக்கின்றன. விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பக அடையாள அட்டையுடன் பதிவுசெய்ய வேண்டும் என உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
