UPDATED : செப் 11, 2015 12:00 AM
ADDED : செப் 11, 2015 10:00 AM
நாமக்கல்
: தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான,
பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சி முகாம் நடந்தது.
அனைவருக்கும் கல்வி இயக்கம், நாமக்கல் அடுத்த எலச்சிபாளையம் வட்டார வள மையம் சார்பில், தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சி முகாம், இரண்டு கட்டமாக, நான்கு நாட்கள் நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பூங்கொடி தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் செல்வராஜ், ஆங்கிலம் எழுதும் திறன் மற்றும் படித்தல் செயல்பாடுகளை மேம்படுத்துதல், வார்த்தைகளை என்றும் நினைவு படுத்தவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
மேலும், பாடல்கள், உடல் இயக்க செயல்பாடுகளை மேம்படுத்துதல் குறித்தும் பயிற்சி அளித்தார். பயிற்சியில் தொடக்க நிலை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
