UPDATED : ஜன 09, 2016 12:00 AM
ADDED : ஜன 09, 2016 11:38 AM
அ நிறம் | அளவு
சென்னை
: சென்னை
பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர்
கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், ஓய்வுபெற்ற ஊழல் ஒழிப்பு மற்றும் வளர்ச்சி கமிஷனர் வேத நாராயணன், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக, அறிவியல் மற்றும் மனித நேய துறை இயக்குனர் பாலசுப்ரமணியன், சென்னை பல்கலைக் கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் சுரேந்திர பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு, துணைவேந்தர் பதவிக்கு தகுதியான, மூன்று பேரை தேர்வு செய்து, அவர்கள் குறித்த விபரங்களை, கவர்னருக்கு பரிந்துரை செய்யும்; அதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.
