UPDATED : மார் 21, 2016 12:00 AM
ADDED : மார் 21, 2016 11:06 AM
சரவணம்பட்டி
: ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் பங்கேற்ற சிலம்பாட்ட நிகழ்ச்சி, கோவை குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது.
சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில், நிறுவனர் நாள் விழா நேற்று நடந்தது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இருந்து, சிலம்பாட்டம் கற்றோர் மற்றும் கற்போர் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு சிலம்பாட்ட சங்கம், கோவை மாவட்ட சிலம்பாட்ட சங்கம், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி சார்பில் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5.00 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சி இரவு, 7:00 மணி வரை நடந்தது.
நிகழ்ச்சியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியின், இணை தாளாளர் சங்கர் வாணவராயர், கல்லுாரி முதல்வர் குமார், தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர் சந்திரமோகன், இந்திய சிலம்பாட்ட சங்க தலைவர் கேசவன், மாவட்ட சிலம்பாட்ட சங்க தலைவர் முத்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று, 1,054 பேருக்கு கல்வி உதவித்தொகை, விருது வழங்கும் விழா நடக்கிறது.
