பள்ளிகளில் நீச்சல் பயிற்சி: கட்டாயமாக்க கேரளா முடிவு
பள்ளிகளில் நீச்சல் பயிற்சி: கட்டாயமாக்க கேரளா முடிவு
UPDATED : அக் 08, 2009 12:00 AM
ADDED : அக் 08, 2009 11:56 AM
அ நிறம் | அளவு
இதுதொடர்பாக கேரள மாநில கல்வித்துறை மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கையில், ‘நீச்சலை கட்டாய பாடமாக்க வேண்டும். இதற்கென பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். உடனடியாக செய்யாவிட்டாலும், படிப்படியாக மேற்கொள்ள வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
தேக்கடி ஏரியில் 47 பேர் பலியான படகு விபத்திற்கு பின், கேரள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக, அங்குள்ள ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில், நீச்சல் பயிற்சியை கட்டாயமாக்கியுள்ளது.
