தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழங்குடியின மாணவி நீட் தேர்வில் வெற்றி

பழங்குடியின மாணவி நீட் தேர்வில் வெற்றி

பழங்குடியின மாணவி நீட் தேர்வில் வெற்றி


UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM

ADDED : ஜூன் 16, 2023 05:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM ADDED : ஜூன் 16, 2023 05:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நீலகிரி மாவட்டம், ஊட்டி மஞ்சகல் மந்துவை பூர்வீகமாக கொண்ட தோடர் பழங்குடியினத்தை சேர்ந்த நார்ஷ்தோர் குட்டன், நித்யா தம்பதியின் மகள் நீத்துசின்,18. இவர் குன்னுார் அருவங்காடு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ்-2 பயின்று நீட் தேர்வு எழுதினார். அதில் 54 சதவீதம் மதிப்பெண் பெற்று நீலகிரி பழங்குடியின மக்களுக்கு பெருமையை தேடி தந்துள்ளார். மாணவி நீத்துசின் கூறுகையில்,மருத்துவத்தில் கார்டியாலஜிஸ்ட் பிரிவில் தேர்ச்சி பெற்று பழங்குடியின மக்களுக்கு சேவை செய்வதே விருப்பம், என்றார்.தாயார் நித்யா கூறுகையில், நீட் தேர்வில் பொது பிரிவினருக்கு நிகராக எஸ்.டி., பிரிவிலும் மதிப்பெண் பெற்றுள்ளார். அர்ப்பணிப்புடன் படித்து சாதனை புரிந்தது பழங்குடியின சமுதாயத்துக்கு பெருமை சேர்த்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தோடர் சமுதாயத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாணவியும் இவர்தான் என்றார். இந்நிலையில் ஊட்டி அருகே உள்ள முத்தநாடு மந்து பகுதியில் மாணவி நீத்துசின்னுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் பாரம்பரிய முறைபடி ஆசி வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us