UPDATED : செப் 14, 2023 12:00 AM
ADDED : செப் 14, 2023 10:33 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி:
வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டியில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி வழங்கப்பட்டது.விவசாயி குருசாமி தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் தாமரைச்செல்வி தலைமை வகித்தார். கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், வழங்கப்படும் மானியம், விதை நேர்த்தி செய்யும் முறை, பொறிபயிர்கள் பயன்பாடு, உரக்கிடங்கு அமைக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ப்ரியா, உதவி தோட்டக்கலை அலுவலர் சிவக்குமார் ஈ-நாம் திட்டம், சொட்டுநீர் பாசனம் குறித்து விளக்கினர். உதவி தொழில்நுட்ப மேலாளர் பூமிநாதன் நன்றி கூறினார்.
