தகவல் அறியும் உரிமை சட்டம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தகவல் அறியும் உரிமை சட்டம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
UPDATED : அக் 14, 2023 12:00 AM
ADDED : அக் 14, 2023 10:09 AM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு நுகார்வோர் மைய்ம் இணைந்து, தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது.திருவள்ளூர் கலவல கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அலுவலர் மருத்துவர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமை வகித்து, தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பேசினார்.நிகழ்ச்சியில், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் சடகோபன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்வராஜ் ஆகியோர், நுகர்வோர் பாதுகாப்பு குறித்தும், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
