UPDATED : அக் 16, 2023 12:00 AM
ADDED : அக் 16, 2023 10:23 AM
அ நிறம் | அளவு
இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.நடப்பாண்டில், புதுப்பித்தல் மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில், ஆதார் எண் அளித்து 18ம் தேதி முதல் வரும் நவ., 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில், ஏதாவது இடர்ப்பாடு ஏற்படும் பட்சத்தில், தங்கள் கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை, ஆதார் எண் நகலுடன் அணுகவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
