UPDATED : அக் 19, 2023 12:00 AM
ADDED : அக் 19, 2023 10:18 AM
அ நிறம் | அளவு
மறைமலை நகர்:
மறைமலை நகர் நகராட்சி, திருவள்ளுவர் சாலையில் உள்ள அரசினர் துவக்கப்பள்ளியில், நேற்று காலை தமிழக அரசின் முதன்மை செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.அவர், நேற்று காலை 8:15 மணிக்கு பள்ளிக்கு வருகை தந்து, பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் காலை உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தில் சோதனை மேற்கொண்டார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பள்ளி குழந்தைகளிடம் உணவின் தரம், சுவை குறித்து கேட்டறிந்தார்.தலைமை ஆசிரியர் பார்த்திபனிடம், பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் மற்றும் மறைமலை நகர் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
