புதுச்சேரி விடுதலை நாளில் பள்ளிகளில் கொடி ஏற்ற உத்தரவு
புதுச்சேரி விடுதலை நாளில் பள்ளிகளில் கொடி ஏற்ற உத்தரவு
UPDATED : அக் 22, 2023 12:00 AM
ADDED : அக் 22, 2023 10:04 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
புதுச்சேரியின் விடுதலை நாளான நவ. 1ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் தேசிய கொடி ஏற்ற பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வித்துறை துணை இயக்குநர் முனுசாமி,
பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
புதுச்சேரி விடுதலைநாள் விழா வரும் நவ. 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடற்கரையில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்று, முதல்வர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, அரசு உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் வரும் நவ.1ம் தேதி காலை 8:00 மணிக்கு தேசிய கொடி ஏற்றி, புதுச்சேரி விடுதலை நாள் குறித்து மாணவர்களுக்கு விளக்க உரையாற்ற ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
