UPDATED : டிச 15, 2023 12:00 AM
ADDED : டிச 15, 2023 10:07 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் ஜி20 ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகளின் கூட்டமைப்பின் சக்தி வாய்ந்த இந்தியாவின் முக்கிய பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு தொடக்க விழா நடந்தது.அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க.ரவி தலைமை வகித்தார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். பேராசிரியர் மணிமேகலை வாழ்த்தினார்.பேராசிரியர் தனுஷ்கோடி வரவேற்றார். பேராசிரியர் செந்தில் குமார் நன்றி கூறினார். பேராசிரியர் புவனேஸ்வரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
