கல்லுாரி செல்லும் பெண்கள் குறைவு: மத்திய அமைச்சர் வேதனை
கல்லுாரி செல்லும் பெண்கள் குறைவு: மத்திய அமைச்சர் வேதனை
UPDATED : டிச 16, 2023 12:00 AM
ADDED : டிச 16, 2023 02:27 PM
ஊபர் மற்றும் ஆக்ஸ்போர்டு எகானமிக்ஸ் ஆகியவை இணைந்து நடத்தி வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை:
பெங்களூரு, சென்னை, டில்லி, கோல்கட்டா மற்றும் மும்பை ஆகிய ஐந்து மாநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நகரங்களில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையை 0.32 மில்லியன் முதல் 0.56 மில்லியனாக உயர்த்தலாம். மேலும், அவர்களின் பொருளாதார நிலை 1 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டு பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பெண் பணியாளர்களின் பங்களிப்பை மேம்படுத்த முடியும். உயர்கல்வியில் பெண்கள் அதிகளவில் சேருவதும் மிக அவசியம். நாடு முழுதும் 2 கோடி பெண்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். பிளஸ் 2வுக்குப் பின், கல்லுாரி படிப்புக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது, என்றார்.
