UPDATED : டிச 17, 2023 12:00 AM
ADDED : டிச 17, 2023 10:25 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் விடுதி மாணவர்களுக்கு இலவச கைடுகள் உரிய நேரத்தில் வழங்கப்படாததால் தவிக்கின்றனர்.ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் நலத்துறை விடுதிகளில் தங்கி படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து பாடங்களுக்கும் கைடுகள் இலவசமாக வழங்கப்படும். ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்பட்ட இவை மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கவும், தேர்ச்சி பெறவும் உதவியாக இருக்கும். இந்த கைடுகள் அரையாண்டுத்தேர்வு முடிந்த பிறகும் இன்று வரை வழங்கப்படவில்லை.இதனால் மாணவர்கள் தவிக்கின்றனர். எனவே இனியாவது கடைசி நேரத்தை தவிர்த்து கல்வியாண்டு துவங்கும்போதே இதனை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
