UPDATED : டிச 19, 2023 12:00 AM
ADDED : டிச 19, 2023 05:07 PM
ஈரோடு:
ஈரோடு அருள் சித்தா மருத்துவமனை டாக்டர் அருள் நாகலிங்கம், கொங்கு கலையரங்கம், கவிதாலயம் மற்றும் கவிதாலயம் இசை பயிற்சி பள்ளி இணைந்து, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதலிடம் பெற்ற, 180 மாணவ, மாணவியருக்கு முதல்வன் விருது வழங்கும் விழா, ௧௯வது ஆண்டாக ஈரோட்டில் நடந்தது. தமிழக காவல்துறை தலைவர் டி.ஜி.பி., விஸ்வநாதன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முதல்வன் விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.விழாவில் கொங்கு கலையரங்கம் தலைவர் சின்னச்சாமி, செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் ஹரிராம் சந்துரு, கொங்கு வேலுசாமி முன்னிலை வகித்தனர். கவிதாலயம் ராமலிங்கம் தலைமை வகித்தார்.இந்து கல்வி நிலையம் தாளாளர் பாலுசாமி, அருண்குமார் பாலுசாமி, நிஷாந்த் மருத்துவமனை டாக்டர் சுமதி பத்மநாபன், காலேஜ் ஆப் பார்மஸி தலைவர் ஸ்பிக் தங்கமுத்து, நவரசம் கலை அறிவியல் கல்லுாரி தாளாளர் செந்தில்குமார் குமாரசாமி, எஸ்.வி.என்., மெட்ரிக் பள்ளி தலைவர் மல்லி பெரியசாமி, ராகவேந்திரா கண் மருத்துவமனை சீனியர் டாக்டர் சுகுமார் விழாவில் கலந்து கொண்டனர்.
