UPDATED : டிச 21, 2023 12:00 AM
ADDED : டிச 21, 2023 10:21 AM
கோவை:
பாரதியார் பல்கலை சார்பில், ரூ.12 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள், நேற்று துாத்துக்குடிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களுக்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து, உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளன.பாரதியார் பல்கலை மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகள் சார்பில், துாத்துக்குடி மாவட்டத்திற்கு, வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.ரூ.12 லட்சம் மதிப்பில், போர்வை, உணவு பொருட்கள், பால் பவுடர், நாப்கின் போன்றவை இரண்டு வாகனங்களில் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாகனத்தை, பாரதியார் பல்கலை துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் அஜீத்குமார் லால் மோகன், கொடியசைத்து துவக்கிவைத்தார்.
