UPDATED : டிச 22, 2023 12:00 AM
ADDED : டிச 22, 2023 05:24 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மாவட்ட அளவிலான கையெழுத்து போட்டி நடந்தது.தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான போட்டியில், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி மாணவி சாரதா தேவிக்கு முதல் பரிசாக 7,000 ரூபாய். ஏறையூர், புனித சார்லஸ் கல்லுாரி மாணவி செல்லத் ஏன்சிக்கு இரண்டாம் பரிசாக 5,000 ரூபாய். ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லுாரி மாணவி புவனேஸ்வரிக்கு மூன்றாம் பரிசாக 3,000 ரூபாய் வழங்கப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி முதல்வர் முனியன் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் வேதியியல் துறைத் தலைவர் தர்மராஜன், தமிழ்த்துறைத் தலைவர் மோட்ச ஆனந்தன், விஜயகுமார் உடனிருந்தனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் நாகராஜன், ஆனந்தகுமார், ஆனந்தி, இன்பகனி, கற்பனைச் செல்வன், வீரப்பன், ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
