sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆசிரியர்களின் புகார்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதிரடி நடவடிக்கை

/

ஆசிரியர்களின் புகார்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதிரடி நடவடிக்கை

ஆசிரியர்களின் புகார்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதிரடி நடவடிக்கை

ஆசிரியர்களின் புகார்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதிரடி நடவடிக்கை


UPDATED : டிச 30, 2023 12:00 AM

ADDED : டிச 30, 2023 04:51 PM

Google News

UPDATED : டிச 30, 2023 12:00 AM ADDED : டிச 30, 2023 04:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ:
சம்பளம் தரவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்த உடன், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உடனே, அதை வழங்கும் படி உத்தரவிட்டு, அதிரடி நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.பா.ஜ.,வின் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதி எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி தனது சொந்த தொகுதிக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். தொகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்தனர். அப்போது ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் பலர், நாங்கள் ஓய்வு பெற்ற போதிலும், வேலைப் பார்த்தபோது எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் இன்னும் வழங்கவில்லை. அதை பெற்றுத்தர உதவ வேண்டும் எனத் தெரிவித்தனர்.இதையடுத்து ஸ்மிருதி இரானி உடனடியாக மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டார். அவரிடம், உங்கள் முன் நிலுவையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் உடனடியாக சரிபார்த்து அனுப்புங்கள் என உத்தரவிட்டார். மேலும், கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுங்கள். இது அமேதி. இங்குள்ள ஒவ்வொருவரும் என்னை அணுகலாம். யோகி ஆதித்யநாத் அரசு, சம்பளம் நிலுவையில் உள்ள ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உடனடியாக கிடைக்க வேண்டும் என விரும்புகிறது. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us