பள்ளி ஆண்டு விழாவில் சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு
பள்ளி ஆண்டு விழாவில் சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு
UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 08:18 PM
புதுச்சேரி:
ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப்பள்ளியின் 19ம் ஆண்டு விழாவில் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப்பள்ளியின் 19ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி, பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், வித்யா நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி, ஆர்த்தி ஆனந்தன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.விழாவில் 2022-23ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் 23 பேர், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரியில் 52 பேர், ஐ.ஐ.டி.,யில்-4 பேர், ஐ.ஐ.டி.,-3 பேர், என்.ஐ.டி.,-21 பேர், சி.ஏ., மற்றும் சி.எம்.ஏ.,பவுண்டேஷன் படிப்பில் 7 பேர் சேர்ந்தனர். அனைவரும் கவுரவிக்கப்பட்டனர்.இதேபோல் 2023-24ம் கல்வியாண்டில் வகுப்பு வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், சாரண, சாரணிய மாணவர்கள் 6 பேர், விளையாட்டு போட்டியில்-3, தேசிய மாணவர் படை பிரிவு மாணவர்கள்-4, கையெழுத்து தேர்வில் பங்கேற்ற 85, அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற 225, பேச்சாற்றலில் சிறந்த விளங்கிய 148, சிறந்த படைப்பாளி குழந்தை விருது பெற்ற 8 பேருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.பள்ளி முதல்வர் ஆண்டறிக்கை வாசித்தார். ஆதித்யா கலைத்துறை இயக்குனர் ராஜமணிக்கம் ஒருங்கிணைப்பில் 67 மழலையர்கள் ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்தினர். 97 பேர் பங்கேற்ற இசை சங்கமம், தியேட்டர் ஆர்ட், ராணி தாராபாய் தனி நடிப்பு, 600 மாணவர்கள் பங்கேற்ற மெகா கொயர், சுடுமண் பொருள் கண்காட்சி, 100 பேர் பங்கேற்ற யோகா, தனி நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து 2,500 மாணவர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடந்தது.

