sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு கல்லுாரிக்கு கிடைக்குமா கூடுதல் வகுப்பறைகள்?

/

அரசு கல்லுாரிக்கு கிடைக்குமா கூடுதல் வகுப்பறைகள்?

அரசு கல்லுாரிக்கு கிடைக்குமா கூடுதல் வகுப்பறைகள்?

அரசு கல்லுாரிக்கு கிடைக்குமா கூடுதல் வகுப்பறைகள்?


UPDATED : ஜன 01, 2024 12:00 AM

ADDED : ஜன 02, 2024 09:52 AM

Google News

UPDATED : ஜன 01, 2024 12:00 AM ADDED : ஜன 02, 2024 09:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
அரசு கலை கல்லுாரியில், புதிதாக கட்டப்பட்ட, 40 வகுப்பறைகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் சுழற்சியில் செயல்பட்டு வந்த, ஆறு துறைகளை சேர்ந்த மாணவர்களின் வகுப்புகள் வழக்கம் போல், முதல் சுழற்சிக்கே மாற்றப்பட்டுள்ளன.கோவை அரசு கலை கல்லுாரியில், 23 இளநிலை, 21 முதுநிலை பிரிவின் கீழ், 5,500 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு வகுப்பறை பற்றாக்குறை காரணமாக, இரண்டு சுழற்சி முறைப்படி கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் நடந்துவந்தன. கடந்தாண்டு 40 வகுப்பறைகள் கொண்ட, புதிய கட்டடம் திறக்கப்பட்டது.கூடுதலாக, 40 வகுப்பறைகள் கிடைத்ததால், ஆறு துறைகளின் இரண்டாம் சுழற்சி வகுப்புகள் முதல் சுழற்சிக்கே மாற்றப்பட்டுள்ளது. இன்னும் 30 வகுப்பறைகள் கிடைத்தால், இரண்டாம் சுழற்சி முறை முழுமையாக கைவிடப்பட்டு, பிற கல்லுாரிகள் போன்று அனைவருக்கும் ஒரே நேரத்தில் வகுப்புகள் நடத்தப்படும் என்று,கல்லுாரி முதல்வர் உலகி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us