ஆன்லைனில் வினாடி வினா போட்டி மக்கள் பங்கேற்க கலெக்டர் அழைப்பு
ஆன்லைனில் வினாடி வினா போட்டி மக்கள் பங்கேற்க கலெக்டர் அழைப்பு
UPDATED : ஜன 15, 2024 12:00 AM
ADDED : ஜன 15, 2024 05:06 PM
கள்ளக்குறிச்சி:
இந்தியாவில் தேர்தல்கள் தலைப்பில் நடக்கும் மாநில அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கத்தில் எஸ்.வி.இ.இ.பி., திட்டத்தின்படி வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகிறது.மாநில அளவிலான இந்த வினாடி வினா போட்டி வரும் 21ம் தேதி காலை 11:00 மணி முதல் 11:15 மணி வரை ஆன்லைனில் நடக்கிறது. போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் பதிவு செய்யலாம்.போட்டியில் பங்கேற்போரின் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியானது கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதளம், மாநில உதவி மைய எண் 1800 4252 1950, மாவட்ட உதவி மைய எண் 1950 என்ற எண்களை தொடர்பு கொண்டு போட்டியில் பங்கு பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.