விளையாட்டையும் வளர்ச்சியின் இலக்காக கொண்டு உழைத்து வருகிறோம்: ஸ்டாலின்
விளையாட்டையும் வளர்ச்சியின் இலக்காக கொண்டு உழைத்து வருகிறோம்: ஸ்டாலின்
UPDATED : ஜன 20, 2024 12:00 AM
ADDED : ஜன 20, 2024 10:50 AM
சென்னை:
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கின. இதில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
* எல்லாருக்கும் எல்லாம் என்பதே நோக்கம். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க உழைத்து வருகிறோம்.* இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உயர்த்துவதே தமிழக அரசின் குறிக்கோள்* தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக சேர்க்கப்பட்டுள்ளது.* கேலோ இந்தியா போட்டிகளை துவக்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன்.* தி.மு.க, அரசு பதவிறே்றப்பின் செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தியுள்ளோம்.* சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் ஆற்றல் விளையாட்டுத்துறைக்கு உண்டு.* விளையாட்டையும், வளர்ச்சியின் இலக்காக கொண்டு உழைத்து வருகிறோம்.* 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நமது இலக்கு. இந்த விழாவைப் பொறுப்பேற்று நடத்தும் அமைச்சர் உதயநிதியைப் பாராடுகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.