UPDATED : ஜன 29, 2024 12:00 AM
ADDED : ஜன 29, 2024 09:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே குயன்வன்குடி நடுநிலைப்பள்ளியில் வானவியல் மன்றம் துவக்க விழாவில், தொலை நோக்கி உதவியுடன் வியாழன் கோளை மாணவர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.மண்டபம் ஊராட்சி ஒன்றியம் குயவன்குடி நடுநிலைப்பள்ளியில் வானவியல் மன்றம் துவங்கப்பட்டது. வட்டாரக்கல்வி அலுவலர் சூசை தலைமை வகித்தார். ராமநாட் ஆஸ்ட்ரோ கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்சொக்கநாதன் முன்னிலை வகித்தார். தொலைநோக்கி உதவியுடன் மாணவர்களுக்கு நிலவின் மேற்புற அமைப்புமற்றும் வியாழன் கோளையும் கண்டுகளித்தனர்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ராகேஷ்சர்மா, பிரான்ஸிஸ் சோபி, இந்திரா, பாலகிருஷ்ணன், மாணவர்கள் பங்கேற்றனர்.