UPDATED : ஜன 31, 2024 12:00 AM
ADDED : ஜன 31, 2024 09:27 AM
விருதுநகர்:
தற்காலிக ஆசிரியர் பணிக்கு பிப்ரவரி 6 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
விருதுநகர் சூலக்கரை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் காலிப்பணியிடமாக உள்ள கணக்கு பட்டதாரி ஆசிரியர், தமிழ், கணினி, வணிகவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக மதிப்பூதிய முறையில் நிபந்தனை அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.ஆசிரியரியர்களுக்குரிய கல்வித்தகுதியுடன் டிப்ளமோ அல்லது பி.எட்.செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்பு ஆசிரியர் பயிற்சி பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 6 மாலை 5:30 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தங்களுடைய கல்விச் சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.