UPDATED : பிப் 02, 2024 12:00 AM
ADDED : பிப் 02, 2024 09:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்களுக்கும், பூமிக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நன்செய் நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தி பிப். 2ல் உலக நன்செய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இயற்கை, மக்களுக்காக நன்செய் நிலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்பது இந்தாண்டு மையக்கருத்து. அதிகம் நீர் பாய்ச்சி வேளாண்மை செய்யும் நிலங்கள் நஞ்சை நிலங்கள் என அழைக்கப்படுகின்றன. நெல், கரும்பு, மஞ்சள், வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் இவ்வகை நிலத்தில் பயிரிடப்படுகின்றன. இன்றைய சூழலில் நன்செய் நிலங்களின் பரப்பளவு குறைகிறது.