UPDATED : பிப் 08, 2024 12:00 AM
ADDED : பிப் 08, 2024 05:19 PM
அ நிறம் | அளவு
நந்தம்பாக்கம்:
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழக அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் வாயிலாக, இன்று முதல் மூன்று நாட்கள், தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடக்கிறது.தொழில்நுட்பத் துறையில் தமிழைப் பயன்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் தமிழ் இணையக் கல்விக்கழகம், இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில்தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்டவற்றில் விவாதம் நடக்கிறது.
