UPDATED : பிப் 11, 2024 12:00 AM
ADDED : பிப் 11, 2024 09:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை:
உளுந்துார்பேட்டை அரசு மாணவியர் விடுதியில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி ஆய்வு செய்தார்.விடுதியில், நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் ஆய்வு செய்த மகளிர் ஆணைய தலைவர் குமாரி, மாணவிகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்தனர். அப்போது மாணவிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.மாணவிகள், விடுதி முன் உள்ள கழிவு நீரால் கொசுத் தொல்லையாக இருப்பதாகவும், அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.