சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு சிவகங்கையில் பிப்.20,22ல் துவக்கம்
சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு சிவகங்கையில் பிப்.20,22ல் துவக்கம்
UPDATED : பிப் 16, 2024 12:00 AM
ADDED : பிப் 16, 2024 09:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பிப்.20ல் 10ம் வகுப்புக்கும், பிளஸ் 2க்கு பிப்.22ம் தேதியும் துவங்குகிறது.மாவட்டத்தில் 10ம் வகுப்பில் 1026 மாணவர்களும், பிளஸ் 2 வில் 691 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.இந்த தேர்வு மாவட்டத்தில் காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி, செட்டிநாடு பப்ளிக் பள்ளி, செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி, சிவகங்கை மான்போர்ட் பள்ளி உள்ளிட்ட 4 பள்ளிகளில் நடைபெறுகிறது.