UPDATED : பிப் 16, 2024 12:00 AM
ADDED : பிப் 16, 2024 09:47 AM
ஊட்டி:
ஊட்டியில் மூன்று நாள் பயணமாக கவர்னர் ரவி நேற்று மாலை ஊட்டி வந்தார். தமிழக கவர்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம், மதியம், 2:30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார். பின், சாலை மார்க்கமாக கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு மாலை 6:15 மணிக்கு வந்தடைந்தார். கலெக்டர் அருணா, எஸ்.பி., சுந்தரவடிவேல் புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.இன்று 16ம் தேதி ஊட்டி அடுத்த முத்தநாடு மந்துவில் உள்ள தோடர் இன பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார். நாளை 17ம் தேதி ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். 18 ம் தேதி காலை , 9:00 மணியளவில் ராஜ் பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். முன்னதாக கவர்னர் வருகையை ஒட்டி சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கவர்னர் வருகையையொட்டி கவர்னர் மாளிகை தாவரவியல் பூங்கா பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது.