UPDATED : பிப் 16, 2024 12:00 AM
ADDED : பிப் 16, 2024 09:52 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி:
காரைக்குடி ராமநவமி மண்டபத்தில் அபிநயா புக்ஸ் சார்பில் புத்தகக் கண்காட்சி பிப்.28 வரை நடைபெறுகிறது.இதில், 5 ஆயிரம் தலைப்புகளில் ஒரு லட்சம் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து புத்தகத்திற்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. கண்ணதாசன், வாலி, சுஜாதா, இந்துமதி, பாலகுமாரன், இந்திரா சௌந்தரராஜன், சாண்டில்யன் கல்கி, வைரமுத்து எழுதிய புத்தகங்கள் மற்றும் சுய முன்னேற்றம், ஆன்மீகம் மருத்துவம், ஜோதிடம், பெண் எழுத்தாளர்களின் நுால்களும் இடம் பெற்றுள்ளன.அரசு போட்டித் தேர்வுக்கான டி.என்.பி.எஸ்.சி., புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. சாகித்ய அகாடமி விருது பெற்ற நீர் வழிப்படூவம் புத்தகமும் உள்ளது. கண்காட்சியானது தினமும் காலை 9:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறுகிறது.
