sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தோல்வி பயமே தேர்வில் மதிப்பெண் குறைய காரணம்: லேனா தமிழ்வாணன் பேச்சு

தோல்வி பயமே தேர்வில் மதிப்பெண் குறைய காரணம்: லேனா தமிழ்வாணன் பேச்சு

தோல்வி பயமே தேர்வில் மதிப்பெண் குறைய காரணம்: லேனா தமிழ்வாணன் பேச்சு


UPDATED : பிப் 20, 2024 12:00 AM

ADDED : பிப் 20, 2024 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2024 12:00 AM ADDED : பிப் 20, 2024 11:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மாணவர்கள் தோல்வி பயத்தாலே குறைந்த மதிப்பெண் எடுக்கிறார்கள் என எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார்.மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கக் கூட்டம் தலைவர் நெல்லை பாலு தலைமையில் நடந்தது. எழுத்தாளர்லேனா தமிழ்வாணன் பேசியதாவது: 
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் நாட்களை தேர்வுக்காக மட்டுமே செலவிடுங்கள். தோல்வி வந்தால் அதை கண்டு கலங்ககூடாது. ஒரு மாணவனின் வாழ்வில் கல்வியில் ஓரிரு வருட இழப்புகள் ஒன்றும் பெரிதல்ல.நம் முயற்சிகளை கேலி செய்கிறவர்களை பார்த்து நாம் தயங்கி விடுகிறோம். கடுமையான போட்டிகளை கண்டு அஞ்சி முயற்சியை கைவிடுபவர்கள் உண்டு. போட்டியாளர்களை நமக்கு உத்வேகம் தருகிற சக்திகளாக பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும்.நன்கு படித்தும் மாணவர்கள் சிலர் குறைந்த மதிப்பெண்கள் எடுக்க காரணம் தோற்றுவிடுவோமா என்ற அச்சத்தில் தேர்வு எழுதுவதுதான். இவ்வாறு பேசினார்.செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us