UPDATED : மார் 19, 2024 12:00 AM
ADDED : மார் 19, 2024 09:36 AM
திருப்பூர்:
நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால், நாளை இரவுக்குள் செய்ய வேண்டுமென விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மே, 5ம் தேதி நீட் தேர்வு நடக்கவுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க, பிப்., 9 முதல், மார்ச், 16ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினத்துடன் அவகாசம் முடிந்த நிலையில், 18 முதல், 20 வரை தேர்வு மையம், பெயர், முகவரி உள்ளிட்டவற்றில் விண்ணப்பங்களில் மாற்றம், திருத்தம் வாய்ப்பு வழங்கப்பட்டது.இரண்டு நாட்கள் நிறைவு பெற்ற நிலையில், நாளை (20ம் தேதியுடன்) இரவுடன் அவகாசம் முடிவடைகிறது. நீட் தேர்வெழுத மாவட்டத்தில் எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரம் ஓரிரு நாளில் தெரிய வரும் என மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.