UPDATED : நவ 25, 2010 12:00 AM
ADDED : நவ 25, 2010 12:59 PM
பல வளர்ந்த நாடுகள், அவர்களின் மொழியை அந்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு குறுகியகால எக்ஸ்சேன்ஜ் பாடத்திட்டங்களை வழங்குகின்றன.
அந்தவகையில் ஜெர்மனி, தனது மொழியை படிக்கும் மாணவர்களுக்கு அதிகளவிலான உதவித்தொகையை (fellowship) வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில், ஜெர்மன் மொழி படிக்கும் மாணவர்களுக்கு கோடைகால பணிகளையும் வழங்குகிறது. இதன்மூலம் மாணவர்கள் பணஉதவி, படிப்பு மற்றும் ஜெர்மன் மக்களுடன் கலந்துறவாடுதல் போன்ற வாய்ப்புகளை பெறமுடியும்.
இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளும் தங்களின் மொழியை படிக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற உதவித்தொகை திட்டங்களை ஏற்படுத்தியுள்ளன. இது சம்பந்தமான முழுமையான தகவல்களுக்கு அருகிலுள்ள சம்பந்தப்பட்ட தூதரகங்களை தொடர்பு கொள்ளவும்.
