தமிழக பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த சிங்கப்பூர் மாணவர்கள்
தமிழக பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த சிங்கப்பூர் மாணவர்கள்
UPDATED : நவ 27, 2010 12:00 AM
ADDED : நவ 27, 2010 11:54 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி வந்துள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இங்கு பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்தனர்.
சிங்கப்பூரிலுள்ளகத்தோலிக்க ஜூனியர் கல்லூரி மாணவர்கள் 20 பேர், ஆசிரியர்கள் 3 பேர், இந்தியா மற்றும் தமிழக பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்து தெரிந்து கொள்ள, தூத்துக்குடி வந்துள்ளனர்.
நேற்று லசால் பள்ளிக்கு சென்ற அவர்கள், பல்வேறு குழுக்களாக பிரிந்து அங்குள்ள மாணவர்களுக்கு ஆங்கிலம், அறிவியல், கணிதப்பாடங்களை சொல்லிக் கொடுத்தனர். பின்னர், நடந்த கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நமது நாட்டின் சிறப்புகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.
அவர்கள் கூறும்போது,“ குறிப்பிட்ட பாடங்கள்குறித்து முன்னரே, குறிப்பெடுத்ததால் அதை மாணவர்களுக்கு தங்களால் எளிதில் கற்றுத்தர முடிந்தது,” என்றனர்.
