UPDATED : நவ 29, 2010 12:00 AM
ADDED : நவ 29, 2010 04:24 PM
அ நிறம் | அளவு
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 37வயதான ரகத் தஸ்லிம் என்ற குடும்பத்தலைவி, "கோன் பனேகா குரோர்பதி சீசன் 4&' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 1 கோடி ரூபாய் பரிசை அள்ளிச் சென்றார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: எனது தாய் பெண் குழந்தையை (என்னை) பெற்றெடுத்ததற்காக அவள் அதிர்ஷ்டமில்லாதவள் என்று வருத்தப்பட்டார்,
தற்போது அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பாள் என நம்புகிறேன். நிகழ்ச்சியில வென்ற பணத்தை எனது இரண்டு குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்துவேன். அவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கு இப்பணத்தை செலவிடுவேன் என்று தெரிவித்தார்.
