UPDATED : பிப் 26, 2011 12:00 AM
ADDED : பிப் 26, 2011 12:06 PM
மாநிலங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை அளிப்பது சம்பந்தமான இந்த திருத்த மசோதாவிற்கு, இழுபறிக்கு பின்பாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏனெனில் இந்த திருத்தங்கள் சம்பந்தமாக நாடாளுமன்ற நிலைக்குழு உள்ளிட்ட சிலவற்றிடமிருந்து சில எதிர்ப்புகள் வந்தன.
மாநில அரசுகள் மற்றும் இதர தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு உதவுவது மற்றும் அவைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பதை ஐ.ஐ.டி -களுக்கு கட்டாயமாக்கும் வகையில் சில பிரிவுகளை அந்த மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் வலியுறுத்தப்பட்டது. இதனால்தான் அந்த தாமதம்.
மேலும் இந்த விஷயத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 8 ஐ.ஐ.டி -களும் சேர்க்கப்பட்டுள்ளன என்று நம்பப்படுகிறது. இந்த ஐ.ஐ.டி -கள் கடந்த 2008 ம் ஆண்டு தொடங்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.
