UPDATED : மார் 11, 2011 12:00 AM
ADDED : மார் 11, 2011 12:28 PM
அ நிறம் | அளவு
மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கற்பித்தல்-கற்றல் பயிற்சிகளை மேம்படுத்த, விப்ரோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட உள்ளது.
இந்த திறன் மேம்பாட்டு திட்டமானது, அந்த பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ள 38 பொறியியல் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். அதிக திறமைகள் இருந்தும் அவற்றை நம்பிக்கையுடன் வெளிப்படுத்த கஷ்டப்படும் மாணவர்களுக்கு இந்த திட்டம் உதவும்.
"மிஷன் 10x" என்ற பெயரிலான அந்த திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். இந்த திட்டம் மூலம் வழங்கப்படும் சான்றிதழ் பயிற்சியானது, மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறும் வகையில் அவர்களுக்கு தகுதியை வழங்கும்.
