sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பக்தியுடன் இணையும் அறிவு ஞானமாக மாறும்

/

பக்தியுடன் இணையும் அறிவு ஞானமாக மாறும்

பக்தியுடன் இணையும் அறிவு ஞானமாக மாறும்

பக்தியுடன் இணையும் அறிவு ஞானமாக மாறும்


UPDATED : ஜூன் 13, 2025 12:00 AM

ADDED : ஜூன் 13, 2025 08:10 AM

Google News

UPDATED : ஜூன் 13, 2025 12:00 AM ADDED : ஜூன் 13, 2025 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
ஆன்மிகம் இல்லாத அறிவு அகங்காரமாக மாறும். பக்தியுடன் இணைந்தால், அது ஞானமாக மாறும் என மகாராஷ்டிரா கவர்னர் ராதா கிருஷ்ணன் பேசினார்.

கோவை எட்டிமடை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில், சத்கமயா, 2025 கலாசார முகாம் நேற்று துவங்கியது.

முகாமை மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசுகையில், நவீன அறிவியல், ஆட்சி மற்றும் நெறிமுறை வாழ்க்கைக்கு பாரதத்தின் பாரம்பரிய ஞானம் வழிகாட்டுகிறது. ஆன்மிகம் இல்லாத அறிவு அகங்காரமாக மாறும். பக்தியுடன் இணைந்தால், அது ஞானமாக மாறும். பூஜ்யத்தின் கருத்து, நெறிமுறை கட்டமைப்புகள் மற்றும் மேம்பட்ட உலோகவியல் நடைமுறைகளில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளது. கலாசார மதிப்புகள் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட வேண்டும், என்றார்.

மூன்று நாட்கள் நடக்கும், சத்கமயா, 2025 நிகழ்ச்சியில் ஆய்வுக்கட்டுரை விளக்கங்கள், சிறப்புரைகள் மற்றும் கலாசார அமர்வுகள் நடக்க உள்ளன.

கற்பித்தலின் நோக்கம், இதயத்தின் அழைப்பு, அறிவியல் மற்றும் ஆன்மிகம் குறித்த அம்மாவின் கண்ணோட்டம், மற்றும் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படையாக கலாசாரம், ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் நடக்க உள்ளன.






      Dinamalar
      Follow us