UPDATED : ஆக 30, 2026 07:05 PM
ADDED : ஆக 30, 2026 07:06 PM
கொடுவாய்:
கொடுவாய் மெரிட் பள்ளியில் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை பயின்ற இரு மாணவியர், நீட் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
அனிதா 720க்கு 558 மதிப்பெண்கள் பெற்று அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பிலும், வினுஹாசினி 417 மதிப்பெண்கள் பெற்று திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., பல் மருத்துவக் கல்லுாரியில் பி.டி.எஸ். படிப்பிலும் சேர்ந்துள்ளனர்.
இருவரும் கிராமப்பகுதியைச் சேர்ந்தவர்கள். பள்ளியில் பெற்ற நீட் பயிற்சி தங்களுக்கு வெற்றிக்கு உதவியதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், 2025 - 26 பொறியியல் கலந்தாய்வில் யாழினி, புகழேஷ் ஆகியோர் சிறந்த 'கட் - ஆப்' மதிப்பெண்கள் மூலம் கோவை சி.ஐ.டி., தொழில்நுட்பக் கல்லுாரியில் கணினி தொழில்நுட்பப் படிப்பில் இடம் பெற்றுள்ளனர்.
