sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விண்வெளியில் துளிர்த்த இலைகள்; படத்தை வெளியிட்டு இஸ்ரோ மகிழ்ச்சி

/

விண்வெளியில் துளிர்த்த இலைகள்; படத்தை வெளியிட்டு இஸ்ரோ மகிழ்ச்சி

விண்வெளியில் துளிர்த்த இலைகள்; படத்தை வெளியிட்டு இஸ்ரோ மகிழ்ச்சி

விண்வெளியில் துளிர்த்த இலைகள்; படத்தை வெளியிட்டு இஸ்ரோ மகிழ்ச்சி


UPDATED : ஜன 07, 2025 12:00 AM

ADDED : ஜன 07, 2025 06:41 PM

Google News

UPDATED : ஜன 07, 2025 12:00 AM ADDED : ஜன 07, 2025 06:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பிய ஆய்வுக்கருவியில், முளைத்துள்ள காராமணி (தட்டைப்பயிறு) செடிகளில் இலைகள் துளிர்த்துள்ளன.

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட் இரண்டு சிறிய செயற்கைக் கோள்களுடன் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிச., 30ம் தேதி விண்ணில் பாய்ந்தது. தற்போது பூமியில் இருந்து 500 கி.மீ., உயரத்தில் உள்ள வட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன.

இதில், பி.ஓ.இ.எம்., 4 எனப்படும் சுற்றுவட்டப் பாதை பரிசோதனை அமைப்பில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், காராமணி எனப்படும் தட்டைப்பயிரின் எட்டு விதைகள் வைத்து அனுப்பப்பட்டன. சில தினங்களுக்கு முன், அவை முளைத்து துளிர் விடும் நிலைக்கு வந்துள்ளன. இந்தியாவின் விண்வெளி உயிரியல் ஆராய்ச்சியில் இந்த சாதனை மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், நேற்று (ஜன.,06) விண்வெளியில் காராமணி (தட்டைப்பயிறு) செடியில் இலைகள் துளிர் விட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதன் புகைப்படத்தை வெளியிட்டு இஸ்ரோ கூறியிருப்பதாவது:

பி.எஸ்.எல்.வி.,- சி 60 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பிய ஆராய்ச்சிக்கருவியில், பயிர் வளர்ப்பு சோதனை வெற்றி அடைந்தது. காராமணி (தட்டைப்பயிறு) செடியில் இலைகள் துளிர் விட்டுள்ளது.

இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us