sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் ரத்து செய்ய பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் கடிதம்

/

ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் ரத்து செய்ய பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் கடிதம்

ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் ரத்து செய்ய பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் கடிதம்

ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் ரத்து செய்ய பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் கடிதம்


UPDATED : அக் 29, 2024 12:00 AM

ADDED : அக் 29, 2024 10:32 AM

Google News

UPDATED : அக் 29, 2024 12:00 AM ADDED : அக் 29, 2024 10:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:
பெரியார் பல்கலையில், அண்மையில் ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர் என மூன்று பேருக்கு, பல்கலை பதிவாளர் விளக்கம் கோரும் கடிதத்தை அளித்துள்ளார்.

சேலம், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:



பெரியார் பல்கலையில், அண்மையில் ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர் என மூன்று பேருக்கு, பல்கலை பதிவாளர் விளக்கம் கோரும் கடிதத்தை அளித்துள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது, ஆரோக்கியமான சூழ்நிலையை பாழ்படுத்தி விடும் என ஆசிரியர் சங்கம் கருதுகிறது. பணியிடை நீக்கம் என்பது நீண்ட காலம் தொடரக் கூடாது என, நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்கலையில், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மட்டுமே வழங்கப்பட்டது தவிர, பதவி உயர்வு காலத்திற்கான பண பலன்களை, பல்கலை வழங்க மறுத்து வருவது கண்டனத்துக்குரியது.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, நுாலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழக அரசுக்கு ஆதாரத்துடன் சங்கம் வழங்கியுள்ளது. உதவி மற்றும் இணை பேராசிரியர் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி என்று முடிகிறதோ, அன்று முதல் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும்.

முன் தேதியிட்டு வழங்கிய பதவி உயர்வு செல்லாது. இது குறித்து உள்ளாட்சி தணிக்கை துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஆசிரியர்கள் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பதவி வகிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பட்டியலின ஆசிரியை பேராசிரியர் தகுதி பெற்றும், உதவி பேராசிரியரர் நிலையிலேயே தொடர்கிறார்.

பொருளியல் துறையில், அறக்கட்டளை மூலம் தங்கப்பதக்கம் வழங்கிட போதிய வட்டி நிதியில்லை என நிறுத்தியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us