UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 03:42 PM

பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வை தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
உதவித்தொகை:
இத்தேர்வின் வாயிலாக 1500 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குப்படுகிறது. இதில் 50 சதவீத மாணவர்கள் அரசுப்பள்ளிகளிலிருந்தும், 50 சதவீத மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்தும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தகுதி:
2024-25ம் கல்வியாண்டில் தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளில், 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு விபரம்:
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படும் இத்தேர்வில், தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் சேர்த்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
செப்டம்பர் 19
தேர்வு நடைபெறும் நாள்:
அக்டோபர் 19
விபரங்களுக்கு:
www.dge.tn.gov.in