UPDATED : மார் 06, 2025 12:00 AM
ADDED : மார் 06, 2025 07:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழகத்தில் முதல் முறையாக, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில், பிஎச்.டி., படிப்பிற்கு மேலாக, எல்.எல்.டி., என்ற மிக உயரிய ஆராய்ச்சி பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிஎச்.டி.,பட்டம் பெற்று, ஐந்தாண்டுக்கு பின், எல்.எல்.டி., படிப்பில் சேரலாம். இப்படிப்பு முழு நேரம் மற்றும் பகுதி நேர படிப்பாக கற்பிக்கப்படும். முழு விபரங்களை, பல்கலை இணையதளமான www.tndalu.ac.in ல் தெரிந்து கொள்ளலாம்.