sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பாலின சமத்துவத்திற்கு எடுத்துக்காட்டு மதுரை நீதிபதி அனிதா சுமந்த் பேச்சு

/

பாலின சமத்துவத்திற்கு எடுத்துக்காட்டு மதுரை நீதிபதி அனிதா சுமந்த் பேச்சு

பாலின சமத்துவத்திற்கு எடுத்துக்காட்டு மதுரை நீதிபதி அனிதா சுமந்த் பேச்சு

பாலின சமத்துவத்திற்கு எடுத்துக்காட்டு மதுரை நீதிபதி அனிதா சுமந்த் பேச்சு


UPDATED : டிச 01, 2025 07:41 AM

ADDED : டிச 01, 2025 07:42 AM

Google News

UPDATED : டிச 01, 2025 07:41 AM ADDED : டிச 01, 2025 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
பாலின சமத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக மதுரை திகழ்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் பேசினார்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில், மாவட்ட நீதித்துறை சார்பில் பாலின சமத்துவம், சமஉரிமை, பெண்களுக்கு அதிகார மளித்தல், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சிவகடாட்சம் வரவேற்றார்.

நீதிபதி அனிதா சுமந்த் பேசியதாவது:


2024 டிசம்பரில் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி துவங்கப்பட்டது. மாநி லத்தின் அனைத்து நிர் வாகத் துறைகள், நீதித் துறைகளில் இருந்து பங்கேற்கும் வகையில் அனைத்து மாவட்டங்கள், புதுச்சேரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் நிறைவு விழாவை நடத்துவதற்கு மதுரை ஒரு சரியான இடம்.

இங்குதான் சொக்கநாதர் 6 மாதங்களும், மீனாட்சி 6 மாதங்களும் ஆட்சி புரிகின்றனர். நாள் முடிவில் இருவரும் பருத்தி உடை அணிகின்றனர். சமத்துவ நோக்கத்தின் சாராம்சம் இங்கிருந்து தொடங்குகிறது. பாலின சமத்துவம், பெண்களுக்கான சம உரிமை கொண்ட ஒரு சமூகம் வேண்டுமெனில் இவ்வகையான அதிகாரப் பகிர்வு தேவை. அதற்கு மதுரை சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.என்.மஞ்சுளா, என்.மாலா, பி.வடமலை, மாவட்ட சட்ட உதவி மைய தலைமை ஆலோ சகர் சிவக்குமார், பெண்கள் சட்ட உதவி மைய தலைவர் நிர்மலா ராணி, குழந்தைகள் நலக்குழு தலைவர் பிரேமலதா, மனநல டாக்டர் லில்லி ஆகியோர் பேசினர்.

மாவட்ட சிறப்பு நீதிபதி மற்றும் பாலின உணர்திறன், உள்புகார்கள் குழு (ஜி.எஸ்.ஐ.சி.சி.,) மாவட்ட தலைவர் என்.நாகலட்சுமி நன்றி கூறினார்.

அரசு இசை கல்லுாரி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாநகராட்சி கமிஷனர் சித்ரா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாவட்ட எஸ்.பி., அரவிந்த் உட்பட மாணவர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us