sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மதுரை காமராஜ் பல்கலை அலுவலர்கள்; 6 ஆண்டுகளாக பதவி உயர்வின்றி தவிப்பு

/

மதுரை காமராஜ் பல்கலை அலுவலர்கள்; 6 ஆண்டுகளாக பதவி உயர்வின்றி தவிப்பு

மதுரை காமராஜ் பல்கலை அலுவலர்கள்; 6 ஆண்டுகளாக பதவி உயர்வின்றி தவிப்பு

மதுரை காமராஜ் பல்கலை அலுவலர்கள்; 6 ஆண்டுகளாக பதவி உயர்வின்றி தவிப்பு


UPDATED : டிச 17, 2025 07:59 AM

ADDED : டிச 17, 2025 08:07 AM

Google News

UPDATED : டிச 17, 2025 07:59 AM ADDED : டிச 17, 2025 08:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலை அலுவலர்களுக்கு 6 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு கிடைக்காததால் மனஉளைச்சலில் உள்ளனர். இதனால் பி.ஆர்.ஓ., உள்ளிட்ட முக்கிய அலுவலக பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.

இப்பல்கலையில் கிளார்க், உதவியாளர், கண்காணிப்பாளர், உதவி, துணைப் பதிவாளர்கள் என 400க்கும் மேற்பட்ட 'ரெகுலர்' பணியிடங்களில் தற்போது 250க்கும் மேற்பட்டவை பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. 2018க்கு பின் அலுவலர்கள் பணி நியமனம் நடக்கவில்லை. தற்போதுள்ள அலுவலர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு 6 ஆண்டுகளாக பதவி உயர்வும் இல்லை.

கண்காணிப்பாளர் பதவியை தாண்டி அடுத்த நிலையில் உள்ள உதவி பதிவாளர் பதவி உயர்வுக்கும் பலர் தகுதி பெற்றுள்ளனர். அதற்கான 'பேனல்' தயார் நிலையில் இருந்தும் பதவி உயர்வு அறிவிப்பதில் 'பொறுப்பு' அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். இதனால் சில ஆண்டுகளாக அலுவலர்கள் பலர் பதவி உயர்வு பலனை பெறாமலேயே 'கண்ணீருடன்' ஓய்வு பெற்று வருகின்றனர்.

தவிர பதிவாளர் உள்ளிட்ட பல்கலையின் உயர் பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. அதில் பேராசிரியர்கள் கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ளும் பி.ஆர்.ஓ., பணியிடம் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. இதனால் டிச.,12ல் நடந்த பட்டமளிப்பு விழா குறித்து பத்திரிகைகளுக்கு அழைப்பு விடுக்கும் பணிகளில் பேராசிரியர், மாணவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இதுபோல் உதவிப் பதிவாளர்கள் பணியிடங்கள் பற்றாக்குறையால் ஒருவர் மூன்று செக் ஷன்களை கவனிக்க வேண்டியுள்ளதால் பணிச்சுமை அதிகரிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இப்பிரச்னை குறித்து தற்போதைய கன்வீனர் சுந்தரவள்ளி கவனத்திற்கு கொண்டு சென்றும் கிணற்றில் போட்ட கல் போல் கிடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அலுவலர்கள் கூறியதாவது:

செல்லத்துரை துணைவேந்தராக இருந்தபோது அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2019 ல் துணைவேந்தராக இருந்த கிருஷ்ணன் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கினார். தவிர 6 ஆண்டுகளாக பதவி உயர்வு பேனல் தயாராக இருந்தும் பதவி உயர்வு கனவாகவே உள்ளது. கன்வீனர் சுந்தரவள்ளி இப்பிரச்னைக்கு முடிவு கட்டுவாரா என எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றனர்.






      Dinamalar
      Follow us