sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி மைக்ரோசாப்ட் முதலீடு: சத்யநாதெல்லா அறிவிப்பு

/

இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி மைக்ரோசாப்ட் முதலீடு: சத்யநாதெல்லா அறிவிப்பு

இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி மைக்ரோசாப்ட் முதலீடு: சத்யநாதெல்லா அறிவிப்பு

இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி மைக்ரோசாப்ட் முதலீடு: சத்யநாதெல்லா அறிவிப்பு


UPDATED : டிச 11, 2025 09:50 AM

ADDED : டிச 11, 2025 09:52 AM

Google News

UPDATED : டிச 11, 2025 09:50 AM ADDED : டிச 11, 2025 09:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
ஆசியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ., சத்ய நாதெல்லா கூறியுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வான சத்யநாதெல்லா, இந்தியா வந்துள்ளார். டிச.,9ல் டில்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

உறுதி
இதனைத் தொடர்ந்து சத்யநாதெல்லா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரதம் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் லட்சியங்களை ஆதரிக்க, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முதல், எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள், உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பிரதமர் மகிழ்ச்சி
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

செயற்கை நுண்ணறிவு துறையைப்பொறுத்தவரை இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளன. சத்ய நாதெல்லா உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே அதிகளவு முதலீட்டை இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்ய உள்ளது மகிழ்ச்சி. செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்த இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

இவ்வாறு அந்தப் பதவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கூகுள் முதலீடு

ஆந்திராவில் மிகப்பெரிய டேட்டா சென்டர் அமைக்க 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us