sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புறநகரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி

/

புறநகரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி

புறநகரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி

புறநகரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி


UPDATED : ஆக 25, 2025 12:00 AM

ADDED : ஆக 25, 2025 08:27 AM

Google News

UPDATED : ஆக 25, 2025 12:00 AM ADDED : ஆக 25, 2025 08:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை மாவட்டத்தில், 1,387 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 17 மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

2024-25ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வில், கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் இருந்து, 498 மாணவர்கள், மாநகராட்சி பள்ளிகளில் இருந்து, 43 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், அரசு பள்ளிகளை சேர்ந்த 78 மாணவர்கள், மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 8 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குத் தகுதி பெற்றனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 10 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றனர். தற்போது காரமடை, சூலுார், எஸ்.எஸ்.குளம் உள்ளிட்ட வட்டாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளிலும், இலவச நீட் பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள, 12 வட்டாரங்களில் விரைவில் பயிற்சி மையங்கள் துவங்கப்படும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us